Tamil Vriksham is an organization set up to honuor & felicitate the successful tamilians, who have achieved overseas with ‘OLIRUM THAMIZHAR AWARD’
Total Pageviews
Friday, 20 January 2012
தமிழ் விருட்சத்தின் முதல் நிகழ்ச்சி - 11/01/2012
பாராட்டுவது மிக அழகான விடயம்.. ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் எந்த ஒரு சின்ன பாராட்டும் மேலும் சிறப்பாக செயல் பட வைக்கும் ஒரு நிகழ்வு..
அங்கீகாரம் வேண்டியே ஒவ்வொருவரும் ஒரு எதிர்பார்ப்புடன் செயல் படுகிறோம்.. சின்ன கை தட்டும் ,அங்கீகாரமும் , எந்த ஒரு செயலையும் மேம்படுத்தும்..
சமீப காலங்களில் உலகெங்கும் வசிக்கும் தமிழர்கள், எவ்வித பேதமுமின்றி தமிழ் இணத்தின் மீது நடந்த அத்துமீறல்களை கண்டித்தார்கள் .
இதன் தொடர்ச்சியாக பேசிகொண்டிருக்கையில் நம் நாட்டில் கண்டனம் தெரிவிக்கபடுகிறது..போராட்டங்களை தாண்டியும் பல விதமான நிகழ்வுகளை பாதிக்க பட்டோருக்காக நடத்துகிறோம்.. அதுவே பாராட்டு என்று வரும்பொழுது நமக்குள்ளே பாராட்டி விருதுகளையும் கொடுப்பது என்பதாக அது நடக்கிறது.. நம்மை நாமே பாராட்டிகொள்வதை விடுத்தது இந்திய மண்ணை தாண்டி ,வெளி நாடுகளில் வாழும் தமிழர்களை பாராட்டி அல்லது விருது வழங்குதல் என்ற நிகழ்வுகள் ஏதும் நடந்தாக குறிப்பு இல்லை..
இவை எல்லாவற்றையும் தாண்டி முதல் முறையாக ஒரு மலேசியா தமிழ் பெண்மணிக்கு தாய் தமிழ்நாட்டில் மிக சிறப்பாக நடந்த ஒரு பாராட்டு விழாவில் ,"ஒளிரும் தமிழர்" என்ற விருது வழங்கும் நிகழ்வு நடந்தது.
மலேசியா மண்ணில் பிறந்த தமிழ் பெண்மணி திருமதி ஜெயா அந்நாட்டு அரசியலில் வெற்றி பெற்ற பெண்ணாய் திகழ்ந்து ,அந்நாட்டு பிரதிநிதியாய் ஐக்கிய நாடுகள் சபையில் பேசிய முதல் தமிழ் பெண் என்ற பெருமை பெற்று . மேலும் மலேசியா நாட்டில் உள்ள பல விருதுகளை பெற்ற அவர் "டத்தீன் படுக்கா " என்ற உயரிய விருதை சிலாங்கூர் சுல்தான் அவர்களிடமிருந்து பெற்றவர். மிக சிறப்பாக சமுதாய சேவை செய்தமைக்காக பல வெற்றிகளை பெற்ற டத்தீன் படுக்கா ஜெயா பார்த்திபன் அவர்களுக்கு தான் அந்த பாராட்டு விழாவும் விருது வழங்கும் விழாவும் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் நடந்தேறியது.
அந்த அபூர்வ நிகழ்வை பன்னீர் தெளித்து துவக்கி வைத்தார் வருணன்.
விடாது பெய்த மழை , நகர முடியா மாநகர போக்குவரத்து நெரிசல் ,என்பதையும் மீறி, விழாவிற்கு மிக சரியான நேரத்தில் வரிசையாக உள்ளே நுழைந்தனர் முக்கிய விருந்தினர்கள்..
மேடையில் மூத்த சமூக சேவகி திருமதி சரோஜினி வரதப்பன் அவர்கள், மலேசியா நாட்டின் மத்திய மனிதவள துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியன் அவர்கள், செட்டிநாட்டின் குமார ராணி டாக்டர் மீனா முத்தையா அவர்கள், நாட்டிய உலகின் ராணி பத்மா சுப்ரமணியன் அவர்கள், எழுத்துலக வேந்தர் திரு பிரபஞ்சன் அவர்கள், மலேசியா இந்தியர் காங்கரசின் இளைஞர் அணி தலைவர் திரு மோகன் தங்கராசு அவர்கள், கலைமாமணி சீதா, ஆகியோர் மேடையில் இருக்க,
அன்பிலும் மழையிலும் நனைந்த நண்பர்கள் கிருஷ்ணா கான சபாவின் அரங்கத்தை நிரப்பினர்..
குறிப்பிட்ட நேரத்தில் மலேசிய தமிழ் தாய் வாழ்த்துடன் துவங்கிய நிகழ்ச்சியை உற்சாகத்தோடு தொகுத்து வழங்க மலேசியாவிலிருந்து வந்திருந்தர் மின்னல் பண்பலை தொகுப்பாளர் திருமதி பொன் கோகிலம். அவரின் தமிழே இசையாக இருந்த போதிலும் , சாதனை நாயகிக்கு இசை
வரவேற்ப்பு கொடுத்தார் திரு குமார் அம்பாயிரம்.. மேடையில் துவங்கிய அந்த டிஜிருடு இசை மெல்ல ஒவ்வொருவரையும் இதமாக சூழ்ந்தது....
தனது சரவெடி பேச்சாலும், உற்சாகத்தாலும் அவையை கொண்டாட்டத்தில் வைத்திருந்தார் தமிழ் விருட்சத்தின் செயலாளரும் ,இந்நிகழ்ச்சியின் தொகுப்பாளருமான
ஹரிஹரன்.
தமிழ் விருட்சத்தின் சார்பாக வந்திருந்த அனைவரையும் வரேவேற்று உரையாற்றினார் தமிழ் விருட்சத்தின் அமைப்பாளர் திருமதி இன்பா சுப்ரமணியன்.
விழா நாயகி எழுதிய "சில நினைவுகள் சில கனவுகள் " புத்தகத்தை செட்டிநாட்டின் குமார ராணி மீனா முத்தையா அவர்கள் வெளியிட ,நாட்டிய உலகின் ராணி பத்மா சுப்ரமணியன் அவர்கள் பெற்றுகொண்டார் . செட்டிநாட்டின் ராணி சிறப்புரை ஆற்றினார்
பத்மபூஷன் டாக்டர் சரோஜினி வரதப்பன் அவர்கள் ,தமிழ் விருட்சத்தின் இலச்சினையை வெளியிட ,மலேசியா நாட்டின் மத்திய மனிதவள துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியன் அவர்கள் , தமிழ் விருட்சத்தின் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்..
தமிழ் விருட்சத்தின் வெளி நாட்டில் வாழ் வெற்றி பெற்ற தமிழர்களை பாராட்டி விருது வழங்கும் திட்டத்தை சிலாகித்து பேசினார் பத்மபூஷன் டாக்டர் சரோஜினி வரதப்பன் அவர்கள் .
சாகித்ய அகதமி விருது பெற்ற திரு பிரபஞ்சன் அவர்கள் , தமிழின் சாதனை பெண்மணி திருமதி ஜெயா பார்த்திபன் அவர்களுக்கு " ஒளிரும் தமிழர் " என்ற விருதை வழங்கினார்.. நெகிழ்வோடும், அன்போடும் விருதை பெற்றுக்கொண்டார் திருமதி ஜெயா பார்த்திபன் அவர்கள்..
ஒளிரும் தமிழர் ஜெயா பார்த்திபன் அவர்களை பாராட்டி பேசிய திரு பிரபஞ்சனின் அவர்களின் சிறப்பு உரையை தொடர்ந்து , மலேசியா நாட்டின் மத்திய மனிதவள துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்..
ஏற்புரை ஆற்றினார் ஒளிரும் தமிழர் திருமதி ஜெயா பார்த்திபன் அவர்கள்.. அவர் வார்த்தைகளில் தனக்கு மீண்டும் உழைக்க வேண்டுமென்ற எண்ணத்தையும் அதை காப்பாற்ற வேண்டுமென்ற அவரின் எண்ணமும்,ஒளிரும் தமிழர் விருது கொடுத்திருப்பதாக கூறிய அவர் குரலில் அன்பும் ,நன்றியும் வெளிப்பட்டது.
இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட , அடுத்த ஒளிரும் தமிழர் யார், விழா எப்போ என்ற குரல்களும், அருமையான நிகழ்வு என்ற சிலாகிப்புகளும் மலர்ந்த முகங்களும் உணர்த்தியது ஒன்றைத்தான்..எல்லோருக்குமே பாராட்ட ஆசை தான்.. சந்தர்ப்பம் வாய்க்கும் பொழுது அனைவரும் பாராட்டுவர்.. பல விருட்சங்கள் வளரும்.. விழுதுகளை தேடி வாழ்த்தும்.. உலகெங்கும், நம் தமிழினம் வலுவாக ஒன்றினையும்.
இது ஒரு சிறிய விதை.. இது விருட்சமாகி செழித்து வளரும்.. பல விழுதுகள் மீண்டும் வெற்றி விருட்சமாகும்..
Tuesday, 10 January 2012
Our committee members
தமிழ் விருட்சத்தின் கமிட்டி உறுப்பினர்கள் :-
Major GI .Pattabiraman : General Manager, Globe dedective agency, Chennai
Mr.BV.Omprakash narayanan Charted Accountant , Rtd AGM of TIIC
Dr .G.Manoharan MBBS MS Gastro, Stanly Hospital. Professor MMC
Ms.Susan Edward , DO, Principal presidency school ,Chennai
Mr.Soma Valliappan , Head HR - financial industry , successful writer .
Mr..R Ravichandran ,Scretary ,Lions Club ,Velachery ,Editor -City Times, social activist
Mr. KS.Rajashekar , Advocate
Mr .R.Rengarajan , Programme head "varthaga ulagam "
Ms. Subha keerthana , freelancer, contributing writer inbox 1305 in new indian express
Major GI .Pattabiraman : General Manager, Globe dedective agency, Chennai
Mr.BV.Omprakash narayanan Charted Accountant , Rtd AGM of TIIC
Dr .G.Manoharan MBBS MS Gastro, Stanly Hospital. Professor MMC
Ms.Susan Edward , DO, Principal presidency school ,Chennai
Mr.Soma Valliappan , Head HR - financial industry , successful writer .
Mr..R Ravichandran ,Scretary ,Lions Club ,Velachery ,Editor -City Times, social activist
Mr. KS.Rajashekar , Advocate
Mr .R.Rengarajan , Programme head "varthaga ulagam "
Ms. Subha keerthana , freelancer, contributing writer inbox 1305 in new indian express
Subscribe to:
Posts (Atom)

